நாடாளுமன்றத்தில் பிரேரணையை ஆதரிக்காத சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை இல்லையாம்
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி0 கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காத, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி கோரும் பிரேரணை மீது நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 47 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 37 உறுப்பினர்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 16 பேர் எதிர்த்து வாக்களித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை.
வாக்களிப்பில் பங்கேற்காத சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.