மேலும்

100 நாடுகளின் அங்கீகாரத்துடன் புதிய ஓட்டுநர் அனுமதிப் பத்திரம்

100 வரையான நாடுகளில் அங்கீகரிக்கப்படும் புதிய டிஜிட்டல் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை  அறிமுகப்படுத்த, சிறிலங்காவின்  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்  நடவடிக்கை எடுத்து வருகிறது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்திற்கு, சர்வதேச செல்லுபடியாகும் தன்மையை வழங்கும்,  வியன்னா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்யும் மற்றும் பல நாடுகளில் ஓட்டுநர் சலுகைகளை எளிதாக்கும் உரிமத்தை வழங்குவதே இதன் குறிக்கோளாகும்.

வெளிவிவகார அமைச்சு , போக்குவரத்து அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஏற்கனவே பல சுற்று கலந்துரையாடல்கள் நடந்துள்ளன.

தேவையான சட்ட மற்றும் நடைமுறைத் தேவைகளை இறுதி செய்வதற்கான பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

வியன்னா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு முன்னர், நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதல்கள் பெறப்படும் என்றும்  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிறி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *