சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது பெயரைப் பரிந்துரைத்தால், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 38 ஆண்டுகளாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் நான், எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் கட்சியை விட்டுச் செல்லவில்லை.
பிரச்சினைகளைச் சமாளித்து நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல என்னால் முடியும் என்று நான் நம்புகிறேன்.
என்னை மக்களுக்குத் தெரியும். நான் மக்களுக்காக உழைத்திருக்கிறேன், நான் நேரடியான நபர். மக்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது.
அதேவேளை அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்தால், அவரை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.