ரிஐடியினருக்கு கொமாண்டோ பயிற்சி அளிக்க கோரினார் நாலக சில்வா
சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு, கொமாண்டோ பயிற்சி அளிக்குமாறு, அதன் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வா தம்மிடம் கேட்டார் என்று, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்துள்ள வாக்குமூலத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொல்லும் சதித் திட்டம் தொடர்பாக, பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக நடத்தப்படும விசாரணைகளின் போதே சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார்.
காவல்துறை மா அதிபரின் அனுமதியுடனேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார் என்றும் சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப் தெரிவித்துள்ளார்.