‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ – சுவிசில் நாளை வெளியீட்டு நிகழ்வு
தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சண்.தவராசா எழுதிய – கட்டுரைகளின் தொகுப்பு நூல் நாளை சுவிஸ் – பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.
சிவராம் ஞாபகார்த்த மன்றம்- சுவிஸ் ஆதரவில் இந்த நிகழ்வு- நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணிக்கு, பேர்ண் mappamondo, Langgassstrasse 44, 3012 Bern என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பா.இளங்கோ (மதுபாரதி) ஊடகர், கவிஞர் இளையதம்பி தயானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.