பெப்ரவரி 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “முதற்கட்டமாக வேட்புமனுக்கள் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கும், 497 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக இன்று வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் பெப்ரவரி 10ஆம் நாள் தேர்தல்கள் நடத்தப்படும்.
இதற்காக, 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.