திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் – மகிந்த தேசப்பிரிய
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்டபடி, அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
“தேர்தலைப் பிற்போடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
வரும் ஜனவரி 8ம் நாள் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்குரிய எல்லா முன்னேற்பாடுகளும், மேற்கொள்ளப்படும்.
வெள்ளம் தொடர்ந்தால் கடற்படையினதும், வீதிப் போக்குவரத்து தடைப்பட்டால், விமானப்படையினதும், இராணுவத்தினதும் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சிறப்பு வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கு செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.