அமெரிக்காவின் பசுபிக் சிறப்பு நடவடிக்கை தளபதி சிறிலங்கா பிரதமருடன் பேச்சு
அமெரிக்காவின் பசுபிக் சிறப்பு நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரயன் பென்டன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
பசுபிக் கட்டளைப் பீட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சிறப்புப் படைகளுக்குப் பொறுப்பானவரான, மேஜர் ஜெனரல் பிரயன் பென்டன் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவர் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் பங்கேற்றார்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நிலைமைகள் மற்றும் சிறிலங்காவுடன் பசுபிக் கட்டளைப் பீடத்தின் ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, அதெிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் பிரயன் பென்டன் மேலும் பல சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டப் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.