மைத்திரி களமிறங்கியது மேற்குலக சூழ்ச்சி – மகிந்த சமரசிங்க
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக சக்திகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க,
“சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேற்கு நாடுகள் இரகசியமாக எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றன.
அவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது மேற்கு நாடுகளின் சூழ்ச்சியாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.