மேலும்

மாதம்: December 2025

சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி மருத்துவமனையில் அனுமதி

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்ட, வேலன் சுவாமி  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜூலி சங் உள்ளிட்ட 29 தூதுவர்களை திருப்பி அழைக்கிறார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம்   சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட தூதுவர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை,  திருப்பி அழைக்கத் தொடங்கியுள்ளது.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் அதிபர்களை நிதி திரட்டலில் ஈடுபடுத்த அரசாங்கம் மறுப்பு

பேரிடர் நிவாரண நிதி திரட்டும் முயற்சிகளில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அதிபர்களை  அரசாங்கம் ஈடுபடுத்தாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மோசமானது

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால்,  வெளியிடப்பட்டுள்ள வரைவில், முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

தையிட்டி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பு.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டியில் பதற்றம் – போராட்டம் நடத்திய வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் பேர் கைது.

தையிட்டியில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடியின் தனிப்பட்ட செய்தியை அனுரவிடம் கையளிப்பார் ஜெய்சங்கர்

இந்திய  வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எடுத்து வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் மூன்றாவது உயர்மட்டத் தலைவர் சாவோ லெஜி  சிறிலங்கா வருகிறார்

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி  நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பாமக தலைவர் ராமதாசுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவுனரும் தலைவருமான, மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.