மேலும்

பாமக தலைவர் ராமதாசுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவுனரும் தலைவருமான, மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

திண்டிவனம் தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில்  நேற்று மாலை 6.15 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு  உருவாக்கப்பட குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான அவசியம் குறித்தும்,  ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படுவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொன்னுத்துரை ஐங்கரநேசன், செல்வராசா கஜேந்திரன், தர்மலிங்கம் சுரேஸ், கனகரட்ணம் சுகாஸ்,   நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *