மேலும்

மாதம்: November 2025

திருவனந்தபுரத்தில் கூட்டு கட்டளைப்பீடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்கா மற்றும் மாலைதீவில்  சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலைகளை அடுத்து, திருவனந்தபுரத்தில், இந்தியா கூட்டுப் படைக் கட்டளைத் தலைமையகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

முற்றிலும் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு நியமனம்

முற்றிலும் சிங்கள இனத்தவர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழுவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது அரசாங்கம்

மக்களுக்கு உறுதியான நிவாரணம் வழங்காத வரவுசெலவுத் திட்டம் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா- ரஷ்ய படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

சிறிலங்கா இராணுவம் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சியான, “வூல்வரின் பாதை 2025” (Wolverine Path 2025) கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் சுவிஸ் தூதுவர்

ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவை சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.

பற்றாக்குறையை 5 வீத இலக்காக கொண்ட வரவுசெலவுத் திட்டம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீத வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளார்.

பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா

சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்ட உரையில் ஆழ்ந்த உறக்கத்தில் அர்ச்சுனா

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள் – தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு

இழப்பீடுகளுக்கான பணியகத்தின் உறுப்பினர்களாக முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள்- பாதிக்கப்பட்டவர்களின் பயத்தை உறுதிப்படுத்தும்

இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது பாதிக்கப்பட்ட  குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும்  உறுதிப்படுத்தும் என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.