மேலும்

பொத்துவிலில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தை அகற்ற கோரிக்கை

பொத்துவிலில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் யூத வழிபாட்டு தலமான சபாத் இல்லத்தை (Shabad House) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த  யூத வழிபாட்டுத்தலம்,  அந்தப்பகுதியில் சர்ச்சையின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு குண்டு அச்சுறுத்தல்களை அடுத்து, பொத்துவில் பகுதியில் கடுமையான பாதுகாப்புக்கும் வழிவகுத்தது.

ஷபாத் ஹவுஸ் என்பது நியூயோர்க்கை தளமாகக் கொண்ட, ஒரு தீவிர பழைமைவாத யூதக் குழுவான சபாத்-லுபாவிச் (Chabad-Lubavitch) இயக்கத்தால் நடத்தப்படும் ஒரு மத மற்றும் கலாசார மையமாகும்.

இது சிறிலங்காவுக்கு வருகை தரும் யூத பயணிகளுக்கு, குறிப்பாக  இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இது ஒரு முஸ்லிம் மசூதிக்கு அருகில் உள்ளது, இந்தப் பகுதியில் உள்ள சபாத் ஹவுஸ் குறித்த கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கிழக்கு கடற்கரை சுற்றுலாப் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று பயண எச்சரிக்கையையும் வெளியிட்டது.

சுற்றுலா நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சபாத் ஹவுஸை அகற்றுவதற்கான முன்னோக்கி செல்லும் வழி குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆளும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

பதிவு இல்லாமல் செயற்பட்டு வரும் இந்த யூத வழிபாட்டு இடம் குறித்த அம்சங்களையும் ஆராய்ந்து, அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாட முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *