மேலும்

கோத்தா அரசாங்கத்தில் மேலும் இரு முன்னாள் படை அதிகாரிகள்

கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மேலும் இரண்டு முன்னாள் படை அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்கா அதிபரின் வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இன்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் 18 ஆவது தளபதியாக பணியாற்றிய அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, 2014ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் ஓய்வு பெற்றிருந்தார்.

அதேவேளை, சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக, முன்னாள் இராணுவ அதிகாரியும்,முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று பதவியேற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், யாழ். படைகளின் கட்டளை தளபதியாகவும், பின்னர் வடக்கு மாகாண ஆளுநராகவும் இவர் பதவி வகித்திருந்தார்.

கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தில்,  தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர்  சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *