மேலும்

புத்தளத்தில் றிசாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுதீன் பயணம் செய்த வாகனம் மீது, புத்தளத்தில் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் றிசாத் பதியுதீனின் வாகன அணியை புத்தளம் முந்தலம, கடைமோட்டை பகுதியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கற்களாலும், கூரிய ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் றிசாத் பதியுதீனின் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் சேதமடைந்தன. அதிலிருந்த சிலர் காயமடைந்தனர்.

எனினும் றிசாதம் பதியுதீன் காயங்களின்றி உயிர் தப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *