மேலும்

எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் காயம்

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாள பரப்புரையில் ஈடுபட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர்.

எஸ்.பி.திசநாயக்க சென்ற வாகனத்தை நேற்றிரவு 7.30 மணியளவில் பொல்பிட்டிய பகுதியில் பொதுமக்கள் சிலர் வழிமறித்தனர்.

வாகனத்தை பயணிக்க விடாமல் தடுத்தபோது, ஏற்பட்ட வாக்குவாதங்களை அடுத்து, பொதுமக்கள் மீது எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இரண்டு பேர், தெலிகம  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்றுள்ள முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *