மேலும்

‘கொலைகாரர்கள் கொல்கிறார்கள்’ – மங்கள

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர,

“கொலைகாரர்கள் கொல்கிறார்கள்.அவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?“  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபி தலைவரும் அதிபர் வேட்பாளருமான அனுரகுமார திசநாயக்க,

“தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக நடந்துள்ள இந்த வன்முறை, அதிகாரத்தில் இல்லாத போது கூட அவர்கள் தங்களை எப்படி நடத்துகிறார்கள் என்று வாக்காளர்களின் கண்களை திறந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *