மேலும்

சஜித் பிரேமதாசவுக்கு அசாத் சாலி ஆதரவு

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை முன்னணி விரிவாக ஆலோசனை நடத்தியது.

கொலைகாரர்களையும் வெள்ளை வான் கலாச்சாரத்தைத் தொடங்கியவர்களையும் ஆதரிக்க முடியாது என்று நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்.

சிறுபான்மை சமூகங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறுகின்ற, பள்ளிவாசல்களில் வாள்கள் இருப்பதாகவும், மதரஸாக்கள் சோதனை செய்யப்படும் என்று கூறும் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடியாது

.எனவே ஒருமனதாக, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்தோம். ஐதேக தலைவரை சந்தித்து எங்கள் செய்தியை தெரிவித்தோம்.

எங்கள் ஆதரவாளர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக செயற்படுவார்கள்.” என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *