வேட்புமனுவில் கையெழுத்திட்டார் கோத்தா
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கோத்தாபய ராஜபக்ச இன்று முற்பகல் கையெழுத்திட்டார்.
மகா சங்கத்தினர் ஆசி வழங்கிய பின்னர், இன்று காலை சுப நேரத்தில் கோத்தாபய ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாளை காலை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.