மேலும்

சிவாஜிலிங்கமும் தேர்தல் களத்தில் – கட்டுப்பணம் செலுத்தினார் அனந்தி

அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரெலோவின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கமும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.

சிவாஜிலிங்கத்தின் சார்பில், அவருடன் சென்ற வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் சார்பில் தாம் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், தமிழ் மக்களின் விருப்பத்தின் பேரில், தாயகத்திலும், புலம்பெயர்ந்தும் வாழுகின்ற மக்களின் கோரிக்கையை ஏற்றே இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும்  கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக ரெலோவின் தவிசாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதற்கான கடிதத்தை தாம், செயலாளர் சிறிகாந்தாவுக்கு அனுப்பியிருப்பதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *