மேலும்

நாமலின் பெயரில் கட்டுப்பணம் – மூன்று ‘ராஜபக்ச’க்களால் குழப்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்திய  ஒன்பது வேட்பாளர்களில் நாமல் ராஜபக்ச என்பவரும் அடங்கியுள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தும் காலஎல்லை இன்று நண்பகலுடன் முடிவுக்கு வந்தது. இன்று மாத்திரம் 9 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

அவர்களில், நாமல் ராஜபக்ச என்ற வேட்பாளரின் சார்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவர் தேசியங்களின் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

அதையடுத்து, கோத்தாபய ராஜபக்ச சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், மாற்று வேட்பாளராக  போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்சவும் கட்டுப்பணம் செலுத்தினர்.

இந்த நிலையில், இன்று அத்திட்டிய, தெகிவளையைச் சேர்ந்த நாமல் ராஜபக்ச என்பவரும், கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதனால், ராஜபக்ச என்ற பெயருடைய மூவர் இந்த தேர்தலில் களமிறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *