மேலும்

சமல் கட்டுப்பணம் செலுத்தியது மாற்று ஏற்பாடு தான் – மகிந்த

சமல் ராஜபக்ச மாற்று ஏற்பாடாகத் தான் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபச்சவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமைந்தால், மாற்று ஏற்பாடாக, சமல் ராஜபக்சவை போட்டியில் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

எனினும், கோத்தாபய ராஜபக்சவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதை அடுத்து, சமல் ராஜபக்ச போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யமாட்டார் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாகவே சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தினார் என்று விமல் வீரவன்சவும் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *