மேலும்

புதுடெல்லி சென்றார் சிறிலங்கா அதிபர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், இன்று பிற்பகல் புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவும் சிறிலங்கா அதிபருடன் புதுடெல்லி சென்றுள்ளது.

புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் வரவேற்றனர்.

இன்று மாலை புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில், சிறிலங்கா அதிபர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *