தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் அல்ல – ராஜித சேனாரத்ன
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிம் அல்ல என்றும், அதன் உண்மையான தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தகவல் வெளியிட்ட அவர்,
“சஹ்ரான் காசிம் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக இருந்திருந்தால், அவர் அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்க மாட்டார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உண்மையான தலைவர் தற்போது, பாதுகாப்பு படைகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் மறந்து விட்டது, ஆனால், அந்த அமைப்பின் தலைவரின் பெயர், எம் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.