மேலும்

சீன விஞ்ஞானிகள் நால்வரும் கொழும்பு குண்டுவெடிப்பில் பலி

சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் ஆய்வு நோக்கங்களுக்காக கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே, அவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். இவர்களின் சடலங்கள் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தக் குண்டுவெடிப்பில் சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்  என்று சீனாவின்  ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *