மேலும்

சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்துவதற்காக, புதிதாக போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

சிறிலங்கா கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள் கிடைத்தன. அமெரிக்காவும் ஒரு போர்க்கப்பலை வழங்க முன்வந்துள்ளது. அந்தக் கப்பல் அடுத்த சில மாதங்களுக்குள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படைக்கு சீனாவும் ஒரு போர்க்கப்பலை வழங்கவுள்ளது.

கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு ஜப்பான் இரண்டு படகுகளை வழங்கவுள்ளது.

கடற்படையும், கடலோரக்காவல்படையும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேலும் பல ரோந்துப் படகுகளைப் பயன்படுத்தும்.

கடற்படை சிறிய படகுகளைக் கட்டி வருகிறது. சீஷெல்சுக்கும் கூட நாங்கள் சிறிய படகுகளை வழங்கியுள்ளோம். 2020இல் நிதி ஒதுக்கீடுகளை பெற்று 17 அடி நீளமுள்ள படகுகளை சிறிலங்காவிலேயே கட்டவுள்ளோம்.

எதிர்காலத்தில் எந்தவொரு போரையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா படையினர் பலப்படுத்தப்பட்டு மிகச் சிறந்த தயார் நிலையில் இருக்கின்றனர்.

வடக்கில் பல காணிகளை விடுவிப்பதற்கு, இராணுவ முகாம்களை இடம்மாற்ற வேண்டியுள்ளது. அதற்கு மேலதிக நிதி தேவைப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *