வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – சுதந்திரக் கட்சி செவ்வாயன்று முடிவு
வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சந்தித்துப் பேசவுள்ளார்.
வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
கூட்டு எதிரணியில் இருந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அதிபர் தலைமையில் நடக்கவுள்ள சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திலேயே வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் வாக்களிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ளது.
வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு வரும் 05ஆம் நாள் இடம்பெறவுள்ளது.