கோத்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு – லசந்தவின் சகோதரர் மறுப்பு
அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாம் எந்த வழக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவை படுகொலை தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க குடியுரிமையை விலக்கும் கோத்தாபய ராஜபக்சவின் நகர்வுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க இதுபற்றிய செய்திகளை மறுத்துள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் இதுபற்றிய வழங்குகள் எதையும் தாக்கல் செய்யும் திட்டம் இல்லை என்றும், கொலைக்குப் பொறுப்பானவர்கள் மீது சிறிலங்கா நீதிமன்றங்கள் என்ன நடவடிக்கையை எடுக்கின்றன என்ற முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.