சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணி, முற்றவெளியில் முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.