திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக மகிந்த ராஜபக்சவுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் 01ஆம் நாள், மகிந்த ராஜபக்ச நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.