அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்
நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.