மேலும்

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து, இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றுள்ள இரண்டு நாடுகளின் தலைவர்களும், மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

பிம்ஸ்ரெக் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் நேற்று காத்மண்டு சென்றடைந்திருந்தார். எனினும் இந்தியப் பிரதமர் மோடி இன்றைய தினமே காத்மண்டுவை வந்தடைந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் இந்தியப் பிரதமர் மோடியும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சந்தித்து, பேசியுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் பேசப்பட்ட விடயங்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *