மேலும்

நேவி சம்பத்தை 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியை எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் கொழும்பில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் என அழைக்கப்படும் இவர், நேற்று கோட்டே மேலதிக நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இன்று மீண்டும் கோட்டே நீதிமன்றத்தில் அவரை முன்னிறுத்திய போதே, எதிர்வரும் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *