சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்குகிறது அமெரிக்கா
சிறிலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ நிதியாக 39 மில்லியன் டொலரை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இந்தப் பங்களிப்பு எமது வங்காள விரிகுடா முனைப்புக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும், சிறிலங்காவுக்கான மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்தங்களுக்கு பதிலளிக்கும் முன்னுரிமைகள் குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, திறந்த, சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்குகளை உறுதிப்படுத்தும் வகையில் நான்கு பிரதான பரப்புகளில் அமெரிக்காவின் நிதியுதவி முதலீடு செய்யப்படும்.
கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, அனர்த்தங்களுக்கு பதிலளித்தல், அமைதிகாப்பு ஆற்றல்கள் மற்றும் நாடுகடந்த குற்றங்களை தடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த நிதியுதவி அமைந்துள்ளது.