மேலும்

மாதம்: May 2018

சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் இழுபறி

எதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு

அவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.

திடீர் சுகவீனமுற்ற கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை

திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட ஐதேக தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

உலகின் மிகச்சிறந்த 18 தொடருந்து பயணங்களில் ‘யாழ்தேவி’

உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்துப் பயணங்களில் ஒன்றாக, கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி தொடருந்துச் சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதேக மே நாள் பேரணியை முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்தி மே நாள் பேரணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.

சமுர்த்தி வங்கியால் கூட்டு அரசுக்குள் மோதல்

சமுர்த்தி வங்கியை சிறிலங்கா மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்

சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படகு மூலம் தாயகம் திரும்பிய 14 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்த 14 தமிழ் அகதிகளை வடக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

சபாநாயகர் ஆசனத்தில் அமரும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு மீண்டும் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது.