மேலும்

சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி

சிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்தக் கடன், எக்சிம் வங்கி ஊடாக வழங்கப்படவுள்ளது. சிறிலங்கா தரப்பு நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளை விரைவாக முன்னெடுக்குமாறும், சீனத் தூதுவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது,

ஒரு கருத்து “சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி”

  1. ‌மன‌ோ says:

    ஆகக் குற‌ைந்தது 400 மில்லியன் ட‌ொலர்கள் யார் யார‌ோ ப‌ொக்கற்றுக்குள் மற‌ையப் ப‌ோகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *