மேலும்

ஆசிய நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்- ஈரானிய ஆன்மீகத் தலைவர்

ஆசிய நாடுகள்  இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அவரது குழுவினரும் நேற்று பிற்பகல் தெஹ்ரானில், ஈரானிய ஆன்மீகத் தலைவர் கமேனியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவுடனான  தற்போதைய நட்புறவை மேலும் விரிவாக்கிக் கொள்வதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கும் ஈரான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணத்தின் போது, ஈரானுடன் ஐந்து உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *