மேலும்

சிறிலங்கா – இந்திய இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று பிற்பகல் தனி விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருடன், மேஜர் ஜெனரல் பிரிதி சிங், பிரிகேடியர் முகேஸ் அகர்வால், உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட  குழுவினரும் சிறிலங்கா வந்துள்ளனர்.

இன்று காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு சென்ற இந்திய இராணுவத் தளபதிக்கு, சிறிலங்கா படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் உள்ள முதன்மை அதிகாரிகளை, இந்திய இராணுவத் தளபதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி.

அதையடுத்து, இரண்டு நாடுகளின் இராணுவத் தளபதிகளும் பேச்சுக்களை நடத்தினர். இந்தச் சந்திப்பில், இருதரப்பு விவகாரங்கள், தற்போதைய விவகாரங்கள், குறித்து கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *