மேலும்

மட்டக்களப்பு: நீதி கோரும் போராட்டமும் சிவராம் நினைவேந்தல் நிகழ்வும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டமும், மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர் அமைப்புகள் இணைந்து, நேற்றுக்காலை மட்டக்களப்பு நகரில், கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தின.

இந்தப் பேரணியில், பங்கேற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர் உள்ளிட்ட பலரும், படுகொலை செய்யப்பட்ட 41 ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தின் போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மறைந்த ஊடகவியலாளர் சிவராமுக்கு அஞ்சலி செலுத்தினர்.

படங்கள் – நன்றியுடன் சபேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *