மேலும்

மகிந்தானந்த அளுத்கமகே நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அமைச்சராக இருந்த போது, அரசாங்க நிதியை முறைகேடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

மகிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த போது, 2014ஆம் ஆண்டு கரம் மற்றும் சதுரங்கப் பலகைகளைக் கொள்வனவு செய்ததில், 39 மில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று முற்பகல் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் மகிந்தானந்த அளுத்கமகே அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் சற்று முற்றர் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *