மேலும்

கூட்டு எதிரணியின் அடுத்த குறி சம்பந்தன்

வரும் மே மாதம் 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

”உண்மையான எதிர்க்கட்சியின் பலம் 54 இல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிரணிக்குத் தான் தரப்பட வேண்டும்.

இது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *