நம்பிக்கையில்லா பிரேரணை- விவாதம் ஆரம்பம்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதையடுத்து, விவாதம் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இன்றிரவு 9 மணி வரை இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.