வடக்கு முதல்வருடன் சிறிலங்கா இராணுவத் தளபதி சந்திப்பு
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ள, பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைப்படி, பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது பற்றி கவனம் செலுத்தப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கில் சிவில் இராணுவ ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா இராணுவத் தளபதி நேற்று யாழ். ஆயரையும், சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்புகளில் 51 ஆவது டிவிசன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரொசான் செனிவிரத்னவும் பங்கேற்றார்.