கொழும்பில் சீன வங்கி
சீன வங்கி,( Bank of Chona) சிறிலங்காவில் முதலாவது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நடந்த இந்த திறப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
உலகின் நான்காவது பெரிய வங்கியான சீன வங்கிக்கு, உலகெங்கும் 600இற்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன.
கொழும்பில் இதன் கிளையை அமைப்பதற்கு உதவிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிலங்காவுக்கான சீன தூதுவர் Cheng Xueyuan நன்றியைத் தெரிவித்துள்ளார்.