மேலும்

வெள்ளிக்கிழமை காலை வரை தடை நீடிக்கும்

social_mediaசமூக வலைத்தளங்கள் மீதான தடை வரும் வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நீக்கப்படும் என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் இன்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று வரும் வியாழக்கிழமை கொழும்பு வரவுள்ளதாகவும், அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

கடந்த வாரம் தொடக்கம் நடைமுறையில் இருக்கும் சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று நீக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *