சீனத் தூதுவரைச் சந்தித்தார் கோத்தா
சிறிலங்காவுக்கான சீனாவின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள செங் ஷுயுவானை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது என்று கோத்தாபய ராஜபக்ச தனது முகநூல் மற்றும் கீச்சக பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா – சீன உறவுகளில் அவரது புதிய பங்களிப்புக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
எனினும், சீனத்தூதுவருடனான சந்திப்புக்கான காரணம் மற்றும் அதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.