மேலும்

இன்று சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

இதில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னதாக, சிறிலங்கா முதலீடு என்ற பெயரிலான  மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *