மேலும்

இடைக்கால அறிக்கை விவாதத்தை புறக்கணிப்பதாக வீரவன்ச அறிவிப்பு

vimal-weerawansaசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில், தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கூட்டுஎதிரணியில் இடம்பெற்றுள்ள தேசிய சுதந்திர முன்னணி, தமது கட்சியின் 5 உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகிக் கொள்வதாக அண்மையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் அறிவித்திருந்தது.

இன்று அரசியலமைப்பு பேரவையாக நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதங்களில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தமது கட்சி ஒருபோதும் ஒத்துழைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை தொடர்பாக இன்று தொடக்கம், மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *