சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்புக்கு 14 மில்லியன் டொலரை வழங்கியது அமெரிக்கா
சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்கா 14 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குழு முறையை முன்னேற்றுவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏனையோரின் ஆற்றலை விருத்தி செய்வதற்குமே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற செயற்பாடுகளை நிர்வகிக்கும் நிலையியல் கட்டளைகளை மீளாய்வு செய்தல் தொடர்பாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அமெரிக்காவில் இருந்த போதும் தாம் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், ஏனைய நாடுகளுடனும் தான் சிறந்த உறவுகளைப் பேணி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.