ரவி கருணாநாயக்கவின் முடிவை சம்பந்தன் வரவேற்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரவி கருணாநாயக்க எடுத்துள்ள முடிவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “ அமைச்சர் பதவியில் இருந்து விலகும் ரவி கருணாநாயக்கவின் முடிவு ஒரு துணிச்சலான நகர்வு.
இவர் தவறு செய்ததாக தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால் கண்டறியப்படவில்லை.
நாட்டினதும் மற்றும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பதாதையின் கீழ் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினதும் நலன் கருதி அவர் பதவியை விட்டு விலகும் முடிவை எடுத்திருப்பதை வரவேற்கிறேன்” என்று கூறினார்.